இந்தியா

உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு: துபாய் புறப்பட்டார் பிரதமர் மோடி

Published On 2023-11-30 13:49 GMT   |   Update On 2023-11-30 13:49 GMT
  • உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு துபாயில் நாளை நடைபெறுகிறது.
  • இதில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று துபாய் புறப்பட்டுச் சென்றார்.

புதுடெல்லி:

உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை துபாய் புறப்பட்டார் என வெளியுறவுத்துறை தெரிவித்தது.

இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள்.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா கூறுகையில், பிரதமர் மோடி உச்சி மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் தனது உரையை ஆற்றுவார். உரையைத் தவிர, பிரதமர் 3 உயர்மட்ட நிகழ்வுகளில் பங்கேற்கிறார். அதில் இரு நிகழ்ச்சிகள் இந்தியாவால் இணைந்து நடத்தப்படுகிறது. இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து நடத்தும் முதல் உயர்மட்ட நிகழ்வு பசுமைமயமாக்கத்தின் தொடக்கமாகும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News