- புருனே நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.
- இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி தென்கிழக்கு ஆசிய நாடான புருனே நாட்டுக்கு சென்றார். இரு நாடுகள் இடையே தூதரக உறவு தொடங்கப்பட்டு 40-வது ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி இப்பயணத்தை மேற்கொண்டார்.
இதன்முலம் புருனே நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.
புருனே மன்னர் ஹாஜி ஹசனல் போல்கியா-பிரதமர் மோடி சந்திப்பு உலகின் மிகப்பெரிய அரண்மனையான இஸ்தானா நூருல் இமான் அரண்மனையில் நடந்தது. பிரதமர் மோடியை மன்னரும், அவரது குடும்பத்தினரும் வரவேற்றனர்.
இரு தலைவர்களும் பாதுகாப்பு, விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பின் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றடைந்தார். இது, பிரதமராக அவருடைய ஐந்தாவது பயணம். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் அவரை வரவேற்று, தனிப்பட்ட முறையில் விருந்தும் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, திருவள்ளுவர் பெயரில், முதல் சர்வதேச கலாசார மையம் சிங்கப்பூரில் துவக்கப்பட உள்ளது. இதை மிக விரைவில் அமைக்க உள்ளதாக, நம் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகள் வெற்றி பயணம் நிறைவடைந்த நிலையில் பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.