இந்தியா (National)

ராகுலின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: சபாநாயகருக்கு பா.ஜ.க. எம்.பி. கடிதம்

Published On 2024-09-25 06:42 GMT   |   Update On 2024-09-25 06:42 GMT
  • எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல்காந்தி தவறாகப் பயன்படுத்துகிறார்.
  • அவரது கருத்துக்கள் தேச விரோத செயலாகும்.

புதுடெல்லி:

ராகுல்காந்தி சமீபத்தில் அமெரிக்கா சென்றார். அவர் பல்கலை மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

வேலையில்லா திண்டாட்டம், சீக்கியர்களின் நிலை மற்றும் இடஒதுக்கீடு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி கூறினார். வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை அவதூறாக பேசுவதா? என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் அமெரிக்காவில் அவதூறாக பேசியது தொடர்பாக ராகுல்காந்தியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு பா.ஜ.க. எம்.பி. சி.பி.ஜோஷி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-


பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல்காந்தி தவறாகப் பயன்படுத்துகிறார். ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகன் என்ற முறையில் அவர் வெளிநாட்டு மண்ணில், இந்தியாவை அவதூறாக பேசுவது எந்த வகையிலும் சரியானது அல்ல. இது போன்ற கருத்துக்களை ராகுல்காந்தி கூறுவதால் நாட்டின் சர்வதேச உறவுகள் பாதிக்கும்.

அவரது கருத்துக்கள் தேச விரோத செயலாகும். நாட்டின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதை, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நியாயப்படுத்த முடியாது. ராகுல்காந்தியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News