இந்தியா (National)

வயதான தாயை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

Published On 2024-09-24 11:26 GMT   |   Update On 2024-09-24 11:26 GMT
  • வயதான தாயை தோட்டத்துக்குள் தூக்கிச் சென்று அந்த நபர் பலாத்காரம் செய்துள்ளார்.
  • தப்பியோடிய அவரை உடன் பிறந்த சகோதரர்கள் தேடிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் தாயை 48 வயது மகன் பலாத்காரம் செய்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் [Bulandshahr] மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 16 அன்று நடந்த பலாத்கார சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. 48 வயது நபர் ஒருவர் தனது மனைவி இறந்த பிறகு தனது தாயை மனைவியாக இருக்க வற்புறுத்தி வந்துள்ளார்.

சம்பவத்தன்று வயதான தாயை தோட்டத்துக்குள் தூக்கிச் சென்று அந்த நபர் பலாத்காரம் செய்துள்ளார். தப்பியோடிய அவரை உடன் பிறந்த சகோதரர்கள் தேடிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பாதிக்கப்பட்ட தாயின் வாக்குமூலத்தை அடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.இந்நிலையில் நேற்றைய தினம் நடந்த இறுதி விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டு அந்த நபருக்கு ஆயுள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.51,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags:    

Similar News