இந்தியா

சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி

Published On 2023-09-16 07:28 GMT   |   Update On 2023-09-16 07:28 GMT
  • விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • அருண் படுகாயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் மஞ்சாடி பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு உன்னி கிருஷ்ணன்(25). இவரது நண்பர்கள் கிழக்கே பரம்பில் வீடு பகுதியை சேர்ந்த ஆசிப் அர்ஷத்(24), மஞ்சாடி புதுப்புறம்பு பகுதியை சேர்ந்த அருண்(25).

இவர்கள் 3 பேரும் தங்களுடைய நண்பரின் திருமணத்திற்காக நேற்று வெளியூருக்கு சென்றிருந்தனர். திருமண விழா கொண்டாட்டங்கள் முடிந்து, 3 பேரும் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் தங்களது ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

எர்ணாகுளம் மாவட்டம் கச்சேரிப்பாடி பகுதியில் இன்று அதிகாலை வந்த போது, அங்கிருந்த சுவரில் அவர்களது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். 3 வாலிபர்கள் படுகாயமடைந்து சாலையில் கிடந்ததை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பார்ததனர்.

அது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்த விபத்தில் விஷ்ணு உன்னி கிருஷ்ணன் மற்றும் ஆசிப் அர்ஷத் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அருண் படுகாயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த 2 வாலிபர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News