இந்தியா

உ.பியில் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி- 3 பேர் படுகாயம்

Published On 2022-06-16 07:15 GMT   |   Update On 2022-06-16 07:15 GMT
  • கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
  • விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பஸ்தி மாவட்டம் கஜூவா கிராமத்தில் உள்ள ஃபதேபூர்- கோரக்பூர் சாலையில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பலத்த காயமடைந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் சிகிச்சைக்கான லக்னோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் ரவி ஸ்ரீவஸ்தவா (40), வந்தனா ஸ்ரீவஸ்தவா (70), ரத்தன் ஸ்ரீவஸ்தவா (35), மற்றும் கார் டிரைவர் என அடையாளம் காணப்பட்டனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News