இந்தியா (National)

உத்தரபிரதேசம்: கூரை இடிந்து விழுந்து 8 பேர் பலி

Published On 2023-03-30 08:32 GMT   |   Update On 2023-03-30 08:32 GMT
  • சம்பவம் பற்றி அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
  • 11 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் சந்த்தவுசி பகுதியில் உள்ள இந்திரா நகர் சாலையில் குளிர்பதன கிடங்கு ஒன்று உள்ளது.

இதன் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் சிக்கி பலியானார்கள். சம்பவம் பற்றி அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 11 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி குளிர்பதன கிடங்கு உரிமையாளர்கள் அங்கூர் அகர்வால், ரோகித் அகர்வால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News