இந்தியா (National)

உங்கள் மனைவி பெயரை இழுத்தது நீங்கள்தான்... சித்தராமையாவுக்கு குமாரசாமி பதில்

Published On 2024-10-07 03:07 GMT   |   Update On 2024-10-07 03:07 GMT
  • சித்தராமையாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொறாமைப்படுவதாக திரும்ப திரும்ப குற்றம்சாட்டு வருகிறார்.
  • அவரது பெயரில் நீங்கள் செய்ய தவறால் அவர் பெயரை வெளியில் கொண்டு வந்துள்ளீர்கள்.

கூட்டணி ஆட்சியில் மேற்கொண்ட பணிகளையும், காங்கிரஸ் செய்த வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்க தயாரா? என்று முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு, மத்திய மந்திரி குமாரசாமி சவால் விடுத்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று மத்திய கனரக தொழில் துறை மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

சித்தராமையாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொறாமைப்படுவதாக திரும்ப திரும்ப குற்றம்சாட்டு வருகிறார். மூடா முறைகேடு வழக்கில் அவரது மனைவி பெயரை இழுத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டுகிறார்.

நீங்கள் வீட்டில் இருந்த உங்களுடைய மரியாதைக்குரிய மனைவியை இழுத்து விட்டீர்கள். இது நாங்களும், எதிர்க்கட்சிகளும் அல்ல. அவரது பெயரில் நீங்கள் செய்ய தவறால் அவர் பெயரை வெளியில் கொண்டு வந்துள்ளீர்கள்.

முதல்-மந்திரி சித்தராமையா எனக்கு குதிரை கொடுத்ததாகவும், அந்த குதிரையில் ஏறி சவாரி செய்ய தெரியவில்லை என்றும் கூறி இருக்கிறார். அடிக்கடி அவரை பார்த்து எதிர்க்கட்சிகள் வயிறு எரிவதாக கூறி வருகிறார். வால்மீகி வளர்ச்சி ஆணையத்தில் நிதிமுறைகேடு செய்தது யார்?. மாநிலத்தில் இந்த முறை எதிர்பார்ப்பை மீறி மழை பெய்து வருகிறது. ஆனால் ஏரி, குளங்களை நிரப்பும் வேலையை இந்த அரசு செய்யவில்லை.

எங்கள் கட்சியின் 38 எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து காங்கிரசுடன் கூட்டணி அமைத்திருந்தோம். கூட்டணி ஆட்சியில் காங்கிரசார் எங்களுக்கு சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அப்படி இருந்தும் நான் முதல்-மந்திரியாக இருந்த 14 மாதங்களில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்திருந்தேன். தற்போது மாநிலத்தில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

கூட்டணி ஆட்சியில் நான் 14 மாதங்களில் செய்த வளர்ச்சி பணிகள் குறித்தும், தற்போது சித்தராமையா தலைமையிலான 15 மாதங்களில் நடந்த வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளேன். இதற்கு சித்தராமையா தயாரா?.

பெங்களூருவில் மழை வந்தாலே வீடுகள், குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கி விடுகிறது. இதனை தடுக்க இந்த ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அரசுக்கு கிடைத்து பல மாதங்கள் ஆகி விட்டது.

தற்போது அரசியல் காரணங்களுக்காக சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சித்தராமையா பேசுகிறார். காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதில் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டனர். பெங்களூருவில் சாலை பள்ளங்களை மூட டி.கே.சிவக்குமார் கெடு விடுத்திருந்தார்.

சாலை பள்ளங்கள் மூடப்படவில்லை. தற்போது பெய்யும் மழையால் இன்னும் என்னவெல்லாம் ஆனது என்பதே தெரியவில்லை. முதல்-மந்திரிக்கும், மந்திரிகளுக்கும் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கறை கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News