இந்தியா (National)

பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய ஜொமோட்டோ ஊழியர்

Published On 2023-07-01 07:16 GMT   |   Update On 2023-07-01 07:16 GMT
  • கரண் ஆப்தே என்ற ஜொமோட்டோ நிறுவன ஊழியர் சமீபத்தில் தனது 30-வது வயதை எட்டினார்.
  • பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடுவதற்காக திட்டமிட்ட கரண் ஆப்தே முதலில் தனக்கு ஒரு புதிய சட்டையை எடுத்துக் கொண்டார்.

எல்லோருமே தங்களது பிறந்தநாளை சிறப்புக்குரிய நாளாக பார்ப்பார்கள். அந்த வகையில் ஜொமோட்டோ நிறுவன ஊழியர் ஒருவர் தனது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடி இருப்பது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

அதாவது, கரண் ஆப்தே என்ற ஜொமோட்டோ நிறுவன ஊழியர் சமீபத்தில் தனது 30-வது வயதை எட்டினார். இதை வித்தியாசமாக கொண்டாடுவதற்காக திட்டமிட்ட அவர் முதலில் தனக்கு ஒரு புதிய சட்டையை எடுத்துக் கொண்டார். பின்னர் அன்றைய தினம், தான் வினியோகம் செய்த ஒவ்வொரு ஆர்டரின்போதும் வாடிக்கையாளர்களுக்கு சாக்லெட் வினியோகித்து பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அது வைரலாக பரவிய நிலையில், சில பயனர்கள் ஜொமோட்டோவை டேக் செய்து கரண் ஆப்தே பிறந்த நாளை கொண்டாடி அவருக்கு பரிசு வழங்குமாறு வலியுறுத்தினர். இதைப் பார்த்த நிறுவனத்தினர் கரண் ஆப்தேவுக்கு பிறந்தநாள் கேக்கை அனுப்பினர். அதையும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags:    

Similar News