புதுச்சேரி

தமிழகத்தை விட புதுச்சேரியில் நெல் கொள்முதல் விலை குறைவு விவசாயிகள் ஏக்கம்

Published On 2024-10-13 05:14 GMT   |   Update On 2024-10-13 05:14 GMT
  • நெற்கதிர்கள் முற்றிய நிலையில் அருவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
  • தமிழகத்தில், நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக, 40 கிலோ நெல் மூட்டை 960 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில் சொர்ணாவாரி பட்டத்தில் 5 ஆயிரம் எக்டேருக்கு அதிகமான பரப்பளவில் ஏ.டீ.டி. 37, கோ 51, சின்ன பொன்னி, ஐ.ஆர். 50 உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்பட்டது.

தற்போது, நெற்கதிர்கள் முற்றிய நிலையில் அருவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தட்டாஞ்சாவடி மார்கெட் கமிட்டியில், கடந்த 9-ந் தேதி நிலவரப்படி, நெல் விலை (75 கிலோ) மூட்டை அதிகபட்சமாக ரூ.1341-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

இந்த விலையை, தமிழகத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, கிலோ ஒன்றுக்கு 7 ரூபாய் புதுச்சேரியில் குறைவாக உள்ளது. தமிழகத்தில், நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக, 40 கிலோ நெல் மூட்டை 960 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் நெல் கொள்முதல் விலை அதிகமாக இருப்பது, புதுச்சேரி விவசாயிகளை ஏக்கமடைய செய்துள்ளது. இந்திய உணவு கழகம் மூலமாக நேரடியாக நெல்லை கொள்முதல் செய்தால், தான் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்கும்.

எனவே, இந்திய உணவுக்கழகம் மூலமாக நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து, நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்க செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News