செய்திகள்

4 நாடுகள் கால்பந்து- இந்திய ஜூனியர் அணி சாம்பியன்

Published On 2018-05-15 05:24 GMT   |   Update On 2018-05-15 05:24 GMT
இந்தியா, செர்பியா, ஜோர்டான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் இடையிலான கால்பந்து போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
பெல்கிரேடு:

இந்தியா, செர்பியா, ஜோர்டான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் இடையிலான (16 வயதுக்கு உட்பட்டோர்) கால்பந்து போட்டி செர்பியாவில் நடந்தது. இதில் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் தஜிகிஸ்தானை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.



இந்திய அணி முதல் ஆட்டத்தில் செர்பியாவுடன் டிரா (0-0) செய்து இருந்தது. 2-வது ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜோர்டானை தோற்கடித்து இருந்தது.  
Tags:    

Similar News