செய்திகள்

சென்னை மாவட்ட கபடி அணிக்கான வீராங்கனைகள் தேர்வு நாளை நடக்கிறது

Published On 2019-01-09 09:45 GMT   |   Update On 2019-01-09 09:45 GMT
66-வது மாநில சீனயர் கபடி சாம்பயின்ஷிப் தொடருக்கான சென்னை மாவட்ட கபடி அணிக்கான வீராங்கனைகள் தேர்வு நாளை நடக்கிறது.
66-வது மாநில சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 19 மற்றும் 20-ந்தேதிகளில் திருச்செங்கோட்டில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான சென்னை மாவட்ட பெண்கள் கபடி அணி தேர்வு ராணி மேரி கல்லூரியில் நாளை (10-ந்தேதி) காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது. 75 கிலோவுக்கு கீழ் உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம்.

ஆண்கள் அணிகள் தேர்வு வருகிற 12-ந்தேதி நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது. 85 கிலோவுக்கு கீழ் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். இந்தத்தேர்வில் பங்கேற்பவர்கள் ஆதார் அடையாள அட்டை மற்றும் புகைப் படத்துடன் வர வேண்டும் என்று சென்னை மாவட்ட கபடி சங்க செயலாளர் கோல்டு எம். ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News