செய்திகள்

வில்வித்தையில் சாதனைப் படைத்த வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புதுச்சேரி கவர்னர் பாராட்டு

Published On 2019-02-06 12:44 GMT   |   Update On 2019-02-06 12:44 GMT
வில்வித்தையில் சாதனைப் படைத்த வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி வாழ்த்து தெரிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்.
சென்னை முகப்பேர் வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஆர்.கே. சாய்ஸ்ரீ. 1-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஆர்கே ஸ்ரீ சந்தானபாலன். இருவரும் வில்வித்தை போட்டியில் பல சாதனைகள் படைத்துள்ளனர்.

மூன்று ஆசிய புத்தகத்திலும், ஒரு இந்திய சாதனை புத்தகத்திலும், ஒரு தமிழ்நாடு இளம் சாதனையாளர் புத்தகத்திலும் இடம் பிடித்து சாதனைப்படைத்துள்ளனர். இளம் வயதிலேயே வில்வித்தை போட்டியில் சாதனைப்படைத்த இருவரையும் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி நேரில் அழைத்து பாராட்டியதோடு, நினைவுப் பரிசுகளும் வழங்கினார்.
Tags:    

Similar News