செய்திகள்

ஐபிஎல் சீசன் 2019: சவுரவ் கங்குலியை ஆலோசகராக நியமித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்

Published On 2019-03-14 08:55 GMT   |   Update On 2019-03-14 08:55 GMT
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆலோசகராக நியமனம் செய்துள்ளது. #IPLSeason2019 #DC
ஐபிஎல் டி20 லீக்கின் 12-வது சீசன் வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடந்த 11 சீசன்களில் டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் விளையாடி வந்த அணி, தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இளம் வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் அந்த அணியின் கேப்டனாக இருக்கிறார். ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.



தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ‘‘டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இணைய இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என கங்குலி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News