செய்திகள்

தூங்கி கொண்டிருந்த பெண்ணை கற்பழித்த கிரிக்கெட் வீரருக்கு 5 ஆண்டு சிறை

Published On 2019-04-30 16:01 GMT   |   Update On 2019-04-30 16:01 GMT
இங்கிலாந்தில் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கற்பழித்த வழக்கில் கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹெப்பெர்னுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. #AlexHepburn
லண்டன்:

ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலெக்ஸ் ஹெப்பெர்ன் என்ற கிரிக்கெட் வீரர், வொர்செஸ்டர்ஷைர் கௌண்டி கிரிக்கெட் கிளப் சார்பில் விளையாடி வருகிறார். இவர் ஒரு ஆல் ரவுண்டர்.
 
2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பார்ட்டிக்கு சென்ற அலெக்ஸ் நன்றாக குடித்தார். அதன்பின், சக வீரரின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கற்பழித்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு இங்கிலாந்தின் வொர்செஸ்டர்ஷைர் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் அலெக்சின் குற்றம் நிரூபணமானதை தொடர்ந்து, ஏப்ரல் 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹெப்பெர்னுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #AlexHepburn
Tags:    

Similar News