விளையாட்டு (Sports)

கிரிக்கெட் மிகவும் கடினம்.. விளையாட்டுகளை ஒப்பிடாதீங்க.. பிரக்ஞானந்தா

Published On 2024-09-26 16:19 GMT   |   Update On 2024-09-26 16:19 GMT
  • செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணி முதல் முறையாக தங்கம் வென்று அசத்தல்.
  • இந்திய அணிக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வரிசையில், பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது.

பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின் பேசிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா, "வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றைச் செய்துள்ளோம், 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளோம்.. கிரிக்கெட்டும் மிகவும் கடினமான களம்.. விளையாட்டுகளை ஒப்பிட வேண்டாம் என நினைக்கிறேன், ஒவ்வொரு விளையாட்டும் மிகவும் கடினம்," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News