கிரிக்கெட் (Cricket)

5வது ஐபிஎல் கப் அடிச்சு 500 நாள் ஆச்சு - ஜடேஜா புகைப்படத்தை பகிர்ந்த சிஎஸ்கே அணி

Published On 2024-10-09 10:36 GMT   |   Update On 2024-10-09 10:36 GMT
  • 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
  • இப்போட்டியில் கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. இதனைடுத்து ஆட்டம் மழையால் தடைப்பட்டதால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இறுதிப்போட்டியில் கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த ஜடேஜா அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸ், போர் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 ஆவது ஐபிஎல் கோப்பையை வாங்கி கொடுத்தார்.

5 ஆவது ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி வென்று இன்றோடு 500 நாட்கள் நிறைவடைந்துள்ளது. அதை கொண்டாடும் விதமாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெற்றிக்கு தேவையான ரன்களை அடித்துவிட்டு ஜடேஜா கொண்டாடும் புகைப்படத்தைப் சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Tags:    

Similar News