கிரிக்கெட் (Cricket)

ஐந்து கிலோ மீட்டரை 30 நிமிடத்தில் கடந்து விடுகிறேன்.. உடற்தகுதி குறித்து சர்பராஸ் கான் கருத்து

Published On 2024-08-17 10:53 GMT   |   Update On 2024-08-17 10:53 GMT
  • கிரிக்கெட்டை பொறுத்தவரை எனக்கு ஓய்வு என்பதே கிடையாது.
  • தொடர்ந்து ஒரு மாதம் ஓடிய பிறகு என்னால் அரை மணி நேரத்தில் ஐந்து கிலோ மீட்டர் வரை ஓட முடிகிறது.

மும்பை:

இந்திய அணி அடுத்த ஐந்து மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் பெரிய பங்கை சர்பராஸ் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சர்பராஸ் கான் உடல் பருமனாக இருப்பதாக அவரை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதனால் தனது உடல் எடையை குறைக்க சர்பராஸ் கான் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடர்களில் கூட சர்பராஸ் கான் சேர்க்கப்படவில்லை. இதனால் அவர் ஆறு மாதம் காலம் வரை எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் இருக்கிறார். எனினும் தனது உடல் எடை அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

கிரிக்கெட்டை பொறுத்தவரை எனக்கு ஓய்வு என்பதே கிடையாது. நான் அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவேன். எழுந்தவுடன் ஓடி பயிற்சி மேற்கொள்வேன்.

தொடர்ந்து ஓடுவதன் மூலம் என்னுடைய உடல் தகுதி அதிகரிக்கிறது. தொடர்ந்து ஒரு மாதம் ஓடிய பிறகு என்னால் அரை மணி நேரத்தில் ஐந்து கிலோ மீட்டர் வரை ஓட முடிகிறது.

ஓடி முடித்த பிறகு தான் ஜிம்மில் இணைந்து பல்வேறு பயிற்சிகளை செய்கிறேன், பேட்டிங் வலை பயிற்சியை மாலை நேரத்தில் வைத்துக் கொள்கிறேன்.

இவ்வாறு சர்பராஸ்கான் கூறினார்.

Tags:    

Similar News