கிரிக்கெட் (Cricket)

டிஎன்பிஎல் இறுதிச்சுற்று: கோவைக்கு எதிராக திண்டுக்கல் பந்து வீச்சு தேர்வு

Published On 2024-08-04 14:16 GMT   |   Update On 2024-08-04 14:16 GMT
  • டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
  • டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சை தேர்வு செய்தது.

சென்னை:

டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சும் மோதுகின்றன.

மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி கோவை அணி முதலில் களமிறங்குகிறது.

Tags:    

Similar News