கிரிக்கெட்

துலீப் கோப்பை: ஷஷ்வத் ராவத் சதம்-இந்தியா ஏ அணி 224/7

Published On 2024-09-19 23:51 GMT   |   Update On 2024-09-19 23:51 GMT
  • துலீப் கோப்பை லீக் போட்டி ஆந்திராவின் அனந்தபூரில் நடந்து வருகிறது.
  • இதில் இந்தியா டி அணியின் தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினர்.

அனந்தபூர்:

ஆந்திராவின் அனந்தபூரில், துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா பி, இந்தியா டி அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பி அணி பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய இந்தியா டி அணியின் தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், ரிக்கி புய் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 306 ரன் எடுத்திருந்தது. சாம்சன் 89 ரன்னும், சரண்ஷ் ஜெயின் 26 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்தியா பி சார்பில் ராகுல் சஹார் 3 விக்கெட் வீழ்த்தினார்.

மற்றொரு லீக் போட்டியில் இந்தியா ஏ, இந்தியா சி அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா சி அணி பவுலிங்'தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் இந்தியா ஏ அணி களமிறங்கியது. அந்த அணியின் ஷஷ்வத் ராவத் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.

ஷாம்ஸ் முலானி 44 ரன்கள் எடுத்தார்.

ஆட்டநேர முடிவில், இந்தியா ஏ அணி 7 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்ததது. ஷஷ்வத் ராவத்122 ரன்னும், ஆவேஷ் கான் 16 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்தியா சி சார்பில் அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டும், விஜயகுமார் விஷாக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News