கிரிக்கெட் (Cricket)

நெருக்கடி கொடுத்த ஸ்பின்னர்கள்... தாக்குப்பிடித்த நியூசிலாந்து உணவு இடைவேளை வரை 92/2

Published On 2024-10-24 06:48 GMT   |   Update On 2024-10-24 06:48 GMT
  • டாம் லாதம் 15 ரன்னிலும், வில் யங் 18 ரன்னிலும ஆட்டமிழந்தனர்.
  • கான்வே நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் இன்று புனேயில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், சுப்மன் கில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

கான்வே, டாம் லாதம் தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறங்கினர். பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் பந்து வீச்சை தொடங்கினர். புனே ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் வேகப்பந்து வீச்சில் விக்கெட் வீழ்த்த முடியவில்லை.

ஏழு ஓவருடன் வேகப்பந்து வீச்சாளர்கள் நிறுத்தப்பட்டனர். 7-வது ஓவரில் இருந்து அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா ஆகியோர் பந்து வீசினர்.

அஸ்வின் தான் வீசிய முதல் ஓவரிலேயே அதாவது ஆட்டத்தின் 7-வது ஓவரில் டாம் லாமை 17 ரன்னில் வெளியேற்றினார்.

மிகவும் துல்லியமாக பந்து வீசியதால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். மூவரும் வீசிய பந்துகள் ஸ்டம்ப் அருகில் சென்று விக்கெட் கீப்பர் கையில் புகுந்தன. ஆனால் பேட்டில் உரசவில்லை. இதனால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தப்பித்தனர். அதேபோல் பல பந்துகள் பேடில் பட்டாலும் எல்.பி.டபிள்யூ இல்லாமல் தப்பித்தனர்.

24-வது ஓவரில் வில் யங் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். லெக்சைடு சென்ற பந்தை அடிக்க முயன்றார். கையுறையில் உரசிச் சென்று விக்கெட் கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. இவர் 18 ரன்கள் எடுத்தார்.

அதன்பின் கான்வே உடன் ரச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்தார். இவர்கள் முதல்நாள் உணவு இடைவேளை ஆட்டமிழக்காமல் தப்பித்தனர். நியூசிலாந்து முதல்நாள் உணவு இடைவேளை 31 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது, கான்வே 47 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

அஸ்வின் 12 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 7 ஓவரில் 11 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஜடேஜா 5 ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

Tags:    

Similar News