கிரிக்கெட் (Cricket)

டோனி டிஆர்எஸ் சிஸ்டம்: அம்பயர் அனில் சவுத்ரி சொன்ன சீக்ரெட்

Published On 2024-08-30 09:54 GMT   |   Update On 2024-08-30 10:59 GMT
  • எம்.எஸ்.டோனி பலருக்கு ரோல் மாடலாகத் திகழ்ந்து வருகிறார்.
  • நடுவர்கள் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்வதிலும் டோனி வல்லவர்.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் டோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. பல தொடர்களில் இந்திய அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் பலருக்கு ரோல் மாடலாகத் திகழ்ந்து வருகிறார்.

விக்கெட் கீப்பிங், ஸ்டம்பிங், ரன் அவுட், கேட்ச் என அனைத்திலும் சிறப்பாக செயல்படும் திறமை கொண்டவர் டோனி. நடுவர்கள் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து முறையீடு (டி.ஆர்.எஸ்) செய்வதிலும் டோனி வல்லவர்.

இந்நிலையில், டோனி எப்போதுமே துல்லியத்திற்கும் நெருக்கமான டி.ஆர்.எஸ். முடிவுகளை எடுப்பார் என இந்தியாவின் பிரபல நடுவர் அனில் சவுத்ரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அனில் சவுத்ரி சமீபத்தில் அளித்த பேட்டியில், ரசிகர்கள் கூறுவது உண்மைதான். டோனி மிகவும் துல்லியமானவர். அவருடைய அழைப்புகள் (டி.ஆர்.எஸ்.) கிட்டத்தட்ட துல்லியத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். பேட்ஸ்மேன்களுக்கு பின்னால் இருப்பதால் விக்கெட் கீப்பர்களால் சில நேரங்களில் பவுலர்களின் பொசிஷனை சரியாகப் பார்க்கமுடியாது. அது வித்தியாசமானது. இருப்பினும் டோனி எடுக்கும் முடிவுகள் காரணம் மிகுந்ததாக இருக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News