கிரிக்கெட்

ஷாருக்கானுடன் வாக்குவாதம்..! தெளிவுபடுத்திய பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளர்

Published On 2024-08-01 13:18 GMT   |   Update On 2024-08-01 13:42 GMT
  • ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
  • மற்ற அணிகளின் உரிமையாளர்கள் கான்ஃபரன்ஸ் மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது.

இதில் ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

இது தொடர்பாக ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், டெல்லி கேபிடல் அணி உரிமையாளர் கிரண் குமார் கிராந்தி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் ரூபா குருநாத், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் மனோஜ் படலே ஆகியோர் கலந்து கொண்டனர்.

மற்ற அணிகளின் உரிமையாளர்கள் கான்ஃபரன்ஸ் மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணை உரிமையாளரான ஷாருக்கானுக்கும் பஞ்சாப் கிங்ஸ் இணை உரிமையாளர் நெஸ் வாடியாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

ஒவ்வொரு அணியும் எவ்வளவு வீரர்களை ரீ-டெய்ன் செய்யலாம் என்ற விவாதத்தில் மிக குறைவான வீரர்களையே ரீ-டெய்ன் செய்யவேண்டும் என்று நெஸ் வாடியா தெரிவித்த கருத்தால் ஷாருக்கானுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அப்பது ஒரு சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று வாடியா தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே எனக்கு ஷாருக்கை தெரியும்.

அவருடைய குடும்பத்தை நான் அறிவேன். அவர் மீதும் குடும்பத்தின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

நாங்கள் வெகுதூரம் பின்னோக்கிச் செல்கிறோம், இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளில் எந்த உண்மையும் இல்லை.

கூட்டத்தில் பேசியது குறித்து நான் அதைச் சொல்லப் போவதில்லை. எல்லோரும் தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள். நான் சொன்னது போல், நீங்கள் அனைத்து பங்குதாரர்களையும் பார்க்க வேண்டும். இது ஒரு நல்ல அமர்வு.

ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஊடகங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அதுவே எங்கள் நோக்கம். அதனால்தான் நாங்கள் இங்கே இருந்தோம்.

இம்பாக்ட் பிளேயர், கேப்டு, அன் கேப்ட் பிளேயர் குறித்து எல்லாம் விவாதிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News