கிரிக்கெட் (Cricket)

2-வது ஒருநாள் போட்டியில் தோல்வி.. அதைபற்றி பேச விரும்பல.. ரோகித் சர்மா

Published On 2024-08-05 05:15 GMT   |   Update On 2024-08-05 05:15 GMT
  • இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
  • முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது.

இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இலங்கை மற்றும் இந்தியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையிலான இரண்டாவது போட்டி நேற்றிரவு கொலம்போவில் நடைபெற்றது. துவக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் தோல்வியுற்ற பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் பற்றி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.

இது குறித்து பேசும் போது, "நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. எப்படி விளையாடினோம் என்பது பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால், மிடில் ஓவர்களில் எங்களது பேட்டிங் பற்றிய பேச்சுவார்த்தை நிச்சயம் இருக்கும். ஒரு போட்டியில் தோல்வி அடையும் போது, எல்லாமே வலிக்கும்."

"அந்த பத்து ஓவர்களை மட்டுமே கூறிவிட முடியாது. தொடர்ந்து நன்றாக விளையாட வேண்டும், அந்த வகையில் இன்று நாங்கள் தோற்றுவிட்டோம். சிறிது ஏமாற்றமாகத் தான் இருக்கிறது. ஆனால் இதெல்லாம் நடக்கும். உங்கள் கண் முன் இருப்பதை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்," என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News