கிரிக்கெட் (Cricket)
null

ஜெய்ஷா ஐசிசி தலைவரானால்... பிசிசிஐ-ன் புதிய செயலாளர் யார்?

Published On 2024-08-26 13:44 GMT   |   Update On 2024-08-27 04:57 GMT
  • டிசம்பர் 1-ந்தேதி ஐ.சி.சி. புதிய சேர்மனாக ஜெய்ஷா பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • பிசிசிஐ செயலாளராக அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருக்கிறார். 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி அவர் அந்த பொறுப்பை ஏற்றார். வருகிற நவம்பர் 30-ந்தேதியுடன் அவரது 4 ஆண்டு காலம் பதவி முடிகிறது.

3 முறை அந்த பதவியில் இருந்த அவர் மேலும் அதில் நீடிக்க விரும்பவில்லை. ஐ.சி.சி. சேர்மன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா அந்த பதவிக்கு போட்டியிடுகிறார். அவர் ஐ.சி.சி.யின் சேர்மனாக ஒரு மாதத்தில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.சி.சி. சேர்மன் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 27-ந் தேதியாகும். ஜெய்ஷா மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கிறார் என்று தெரிகிறது. டிசம்பர் மாதம் 1-ந்தேதி ஐ.சி.சி. புதிய சேர்மனாக ஜெய்ஷா பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெய் ஷா ஐ.சி.சி. சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்த பி.சி.சி.ஐ. செயலாளராக மறைந்த பாஜக தலைவர் அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

தற்போது டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ரோஹன் ஜெட்லி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News