செய்திகள் (Tamil News)

புழல் சிறையில் குண்டர் சட்ட கைதியிடம் 2 செல்போன்கள் பறிமுதல்

Published On 2016-06-29 06:45 GMT   |   Update On 2016-06-29 06:45 GMT
புழல் சிறையில் குண்டர் சட்ட கைதியிடம் 2 செல்போன்கள் பறிமுதல் செய்த போலீசார் அவருக்கு செல்போன்கள் கொடுத்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
செங்குன்றம்:

பெரியபாளையம் கன்னிகை பேர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தணிக்காசலம் (29). இவரை சென்னை கே.கே.நகர் போலீசார் அடிதடி வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு புழல் சிறையின் ஜெயிலர் வெங்கடேசன் ரோந்து சென்றார். அப்போது சிறையின் அறைக்குள் இருந்து தணிகாசலம் செல்போனில் பேசி கொண்டு இருந்தார். உடனே அவரை பிடித்து ஜெயிலர் வெங்கடேசன் சோதனை செய்தார். பின்னர் தணிக்காசலத்திடம் இருந்த 2 செல்போன்களை பறிமுதல் செய்தார்.

இதுகுறித்து ஜெயிலர் வெங்கடேசன் புழல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவபாலன் வழக்கு பதிவு செய்து தணக்காசலம் யாரிடம் பேசினார் அவருக்கு 2 செல்போன்கள் கொடுத்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News