செய்திகள் (Tamil News)

சிவகாசியில் தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை

Published On 2017-01-25 16:55 GMT   |   Update On 2017-01-25 16:55 GMT
விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சிவகாசி:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ‘உங்களுடன் நான்’ என்ற நிகழ்ச்சி மூலம் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதன்படி நேற்று விருதுநகர் மாவட்டம் சார்பாக சிவகாசியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

அப்போது கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது குடும்பத்தோடு விஜயகாந்துடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் செய்யது காஜா செரீப் செய்திருந்தார். ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.

சிவகாசி வந்த விஜயகாந்திற்கு விருதுநகரில் இருந்து சிவகாசி வரை வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியையொட்டி சிவகாசி நகரம் முழுவதும் தே.மு.தி.க.வின் கொடி மற்றும் தோரணங்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

Similar News