செய்திகள்
4 தலைமுறைகளை கடந்து 104-வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி
வாடிப்பட்டியில் 4 தலை முறைகளை கடந்த மூதாட்டி தனது 104-வது பிறந்தநாள்விழாவை கேக் வெட்டி கொண்டாடினார்.
வாடிப்பட்டி:
வாடிப்பட்டி அருகே உள்ள நீரேத்தான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜுப்பிள்ளை, தந்தை பெரியாருடன் நெருக்கமானவர்.
திராவிடர் கழகத்தின் மூத்த முன்னோடியான இவரது மனைவி மீனாட்சியம்மாள் (வயது 104) ராஜுப்பிள்ளை சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட நிலையில் மனைவி மீனாட்சியம்மாள் 4 தலைமுறைகளை கடந்து 104வயதாகியும் தனது மகன் பராமரிப்பில் நலமுடன் உள்ளார்,
அவரது 104-வது பிறந்தநாள் விழா வாடிப்பட்டியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது, மூதாட்டியின் குடும்பத்தினர், பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், பேத்திகள் புடைசூழ கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய மீனாட்சியம்மாளுக்கு வண்ண மாலை, மலர் கிரீடம், மற்றும் மலர்களால் ஆன கதமும் வழங்கப்பட்டது
விழாவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று 4 தலை முறைகளை கடந்த பாட்டியிடம் ஆசி பெற்றனர்.#tamilnews
வாடிப்பட்டி அருகே உள்ள நீரேத்தான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜுப்பிள்ளை, தந்தை பெரியாருடன் நெருக்கமானவர்.
திராவிடர் கழகத்தின் மூத்த முன்னோடியான இவரது மனைவி மீனாட்சியம்மாள் (வயது 104) ராஜுப்பிள்ளை சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட நிலையில் மனைவி மீனாட்சியம்மாள் 4 தலைமுறைகளை கடந்து 104வயதாகியும் தனது மகன் பராமரிப்பில் நலமுடன் உள்ளார்,
அவரது 104-வது பிறந்தநாள் விழா வாடிப்பட்டியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது, மூதாட்டியின் குடும்பத்தினர், பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், பேத்திகள் புடைசூழ கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய மீனாட்சியம்மாளுக்கு வண்ண மாலை, மலர் கிரீடம், மற்றும் மலர்களால் ஆன கதமும் வழங்கப்பட்டது
விழாவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று 4 தலை முறைகளை கடந்த பாட்டியிடம் ஆசி பெற்றனர்.#tamilnews