செய்திகள்

ஸ்மார்ட் செல்போன் வாங்கி கொடுக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2018-06-04 04:32 GMT   |   Update On 2018-06-04 04:32 GMT
ஸ்மார்ட் செல்போன் வாங்கி கொடுக்காததால் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தீர்த்தமலை பால குட்டை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அய்யாத்துரை. இவர் திருப்பூர் அருகே மங்கலம் வேட்டுவபாளையத்தில் குடும்பத்துடன் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகள் அகிலா (22). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். அகிலா தனது தந்தையிடம் கல்லூரி மாணவிகள் அதிகம் பேர் ஸ்மார்ட்செல்போன் வைத்துள்ளனர்.

தனக்கும் ஸ்மார்ட் செல்போன் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை அய்யாதுரை தற்போது பண கஷ்டத்தில் இருக்கிறேன். பின்னர் வாங்கி தருகிறேன் என கூறி உள்ளார்.

அகிலா கண்டிப்பாக ஸ்மார்ட் செல்போன் வாங்கி தரும்படி அடம் பிடித்துள்ளார். இதனால் அவரை கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என பெற்றோர் கூறியதாக தெரிகிறது.

இதில் மனம் உடைந்த அகிலா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அகிலா பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News