கருணாநிதியின் உடல்நிலை பாதிப்பு: மேலும் ஒரு தி.மு.க. தொண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளிப்பட்டு:
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தி.மு.க. தொண்டர்கள் சோகத்தில் உள்ளனர்.
கருணாநிதியின் உடல் நலக்குறைவை தாங்கிக் கொள்ள முடியாத எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த ராஜூ என்பவர் நேற்று திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது பள்ளிப்பட்டு அருகே மேலும் ஒரு தி.மு.க. தொண்டர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிப்பட்டு அருகே உள்ள வாணிவிலாசபுரம், பழைய காலனியை சேர்ந்தவர் கங்கன் (வயது 65) தீவிர தி.மு.க. தொண்டர். அவர், கருணாநிதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது பற்றி நண்பர்கள், உறவினர்களிடம் அடிக்கடி மனவேதனையுடன் பேசி வந்தார்.
நேற்று இரவு அவர் உறவினர்கள் சிலரிடம் பேசியபோது தற்கொலை செய்யப்போவதாக கூறினார். அவரை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மனவேதனையில் இருந்த கங்கன் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். #DMKVolunteersuicide