செய்திகள்

ஆரத்தி எடுப்பவர்களுக்கு பணம்- கனிமொழி மீது அதிமுக புகார்

Published On 2019-03-27 04:52 GMT   |   Update On 2019-03-27 04:52 GMT
தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி, ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி வழங்குவதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. #Kanimozhi #ADMK
சென்னை:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பதுரை எம்.எல்.ஏ. புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி, ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி வழங்குகிறார். திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் அப்போது உடன் இருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தேர்தல் விதிகளை மீறி இதுபோன்று பணம் கொடுப்பது குற்றமாகும். எனவே விதிமீறலில் ஈடுபட்ட கனிமொழியின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்.

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் பரிந்துரைக்க வேண்டும்.

இவ்வாறுஅந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #Kanimozhi #ADMK
Tags:    

Similar News