செய்திகள் (Tamil News)
மழை வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை மையம்

Published On 2021-05-20 12:16 GMT   |   Update On 2021-05-20 12:16 GMT
சென்னையில் தற்போது மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் தாம்பரம், ஆலந்தூர், தரமணி போன்ற இடங்களில் இன்று மாலை திடீரென மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 11 மாவட்டங்களில் மிதமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Similar News