செய்திகள் (Tamil News)
அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை மையம்
சென்னையில் தற்போது மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் தாம்பரம், ஆலந்தூர், தரமணி போன்ற இடங்களில் இன்று மாலை திடீரென மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 11 மாவட்டங்களில் மிதமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.