தமிழ்நாடு

சேது சமுத்திர திட்டத்தால் மீனவர்களுக்கு பயனில்லை - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

Published On 2023-01-13 23:21 GMT   |   Update On 2023-01-13 23:37 GMT
  • சேது சமுத்திரத் திட்டம் 4 ஏ என்றால் அதை பாஜக கடுமையாக எதிர்க்கும் என தெரிவித்துள்ளார்.
  • சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்களுக்கு பயனில்லை என்றார்.

நெல்லை:

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்களுக்கு பயனில்லை . மத்திய அரசுடன் இணைந்து புதியதாக சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தினால் பா.ஜ.க. ஆதரிக்கும். இத்திட்டத்தால் பொருளாதார ரீதியில் இயங்கும் பெரிய கப்பல்களுக்கு லாபம் இருக்காது.

ஒரு திட்டம் கொண்டு வந்தால் ஆண்டுக்கு 12 சதவீதம் வருமானம் தர வேண்டும். அரசியல் காரணத்திற்காக சேது சமுத்திரத் திட்டம் நிறுத்தப்பட்டதாக முதலமைச்சர் கூறுவது தவறானது. சேது சமுத்திரத் திட்டம் 4 ஏ என்றால் அதை பா.ஜ.க. கடுமையாக எதிர்க்கும்

காவல்துறையை எனது கட்டுப்பாட்டில் கொடுத்தால் ஏழு நாட்களுக்குள் சுபஸ்ரீ கொலையா, தற்கொலையா என்பதைச் சொல்லிவிடுவேன்.

புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News