தமிழ்நாடு (Tamil Nadu)

பா.ஜ.க. மாவட்ட தலைவர்கள் உள்பட 3 பேர் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்- அண்ணாமலை நடவடிக்கை

Published On 2024-06-23 07:11 GMT   |   Update On 2024-06-23 07:11 GMT
  • மது சூதனனின் மனைவி ஹரிணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
  • கடந்த சில தினங்களுக்கு முன்பு, அகோரம் சிறையில் இருந்து ஜாமின் பெற்று வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி:

திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் எஸ்.பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கே.அகோரம், திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகிய 3 பேர் அவர்கள் வகித்து வரும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இவர்களை கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நீக்கி உள்ளார்.

நீக்கப்பட்ட 3 பேரும் குற்ற வழக்குகளில் கைதானவர்கள் ஆவர். குடவாசல் காவனூர் பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் பா.ஜ.க.வில் விவசாய பிரிவு மாவட்டத் தலைவராக பதவி வகித்தவர். இவர் ஓகை என்ற இடத்தில் அடகு கடை நடத்தி வந்த நிலை நிலையில் பைக்கில் வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். படுகாயமடைந்த மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மது சூதனனின் மனைவி ஹரிணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதில் திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாஸ்கர் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகியோர் தூண்டுதலின் பேரிலேயே கூலிப் படையினர் தனது கணவரை கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் பாஸ்கர், செந்திலரசன் ஆகியோரை கைது செய்தனர். பின்பு அவர்கள் ஜமீனில் வெளியில் வந்தனர்.

தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வலை தளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பா.ஜ.க. தலைவர் அகோரம் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரத்தை மும்பையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அகோரம் சிறையில் இருந்து ஜாமின் பெற்று வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News