தமிழ்நாடு (Tamil Nadu)

பழைய காவலர் குடியிருப்பில் வெடித்த நாட்டு வெடிகுண்டு

Published On 2024-05-21 06:47 GMT   |   Update On 2024-05-21 06:47 GMT
  • 20 ஆண்டுகளாக மூடியுள்ள குடியிருப்பில் சுத்தம் செய்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
  • குடியிருப்பில் இருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளில், 2 நாட்டு வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள பழைய காவலர் குடியிருப்பில் 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்து காவலர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

20 ஆண்டுகளாக மூடியுள்ள குடியிருப்பில் பூட்டை உடைத்து சுத்தம் செய்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

குடியிருப்பில் இருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளில், 2 நாட்டு வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

படுகாயம் அடைந்த போக்குவரத்து காவலர் சரவணன் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News