தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங்க் விட்டுச்சென்ற அரசியல் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வாழ்த்துகள்- சீமான்

Published On 2024-07-22 14:01 GMT   |   Update On 2024-07-22 14:01 GMT
  • மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மாநில தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி. ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது கொலையில் 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதைதொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி. ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தம்பி வழக்கறிஞர் ஆனந்தன் அவர்களுக்கும், மாநில ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தங்கை பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

நம்முடைய தாத்தாக்கள் இரட்டைமலை சீனிவாசனார், அயோத்திதாச பண்டிதர், 'புரட்சியாளர்' சட்டமேதை அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் காட்டிய வழியில் பயணித்து, ஒடுக்கப்பட்டு, வீழ்த்தப்பட்டிருக்கும் ஆதித்தமிழ்க்குடி மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் பாடுபடவும், மறைந்த அன்பிற்குரிய தம்பி ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் விட்டுச்சென்ற அரசியல் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவும் என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News