தமிழ்நாடு

மேய்ச்சலுக்கு சென்ற 4 எருமை மாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Published On 2022-11-05 07:15 GMT   |   Update On 2022-11-05 07:15 GMT
  • விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக வந்த எருமை மாடுகள் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.
  • உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியை அடுத்துள்ள பெருமாட்டு நல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன்னிவாக்கம் கிராமத்தில் காயரம்பேடு கிராமத்தை சேர்ந்த கண்ணையா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.

நேற்று அங்கு மின் கம்பி அறுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

அப்போது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக வந்த 4 எருமை மாடுகள் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தன. உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் அப்பகுதிக்கு வந்து இறந்து கிடந்த மாடுகளை அப்புறப்படுத்தி விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News