தமிழ்நாடு (Tamil Nadu)

தமிழ்நாட்டில் முதல்முறையாக மின்சார படகு சவாரி- சுற்றுலா பயணிகள் வரவேற்பு

Published On 2024-10-02 10:30 GMT   |   Update On 2024-10-02 10:30 GMT
  • உணவுகளை சாப்பிட்டவாறு படகில் பயணிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.
  • 20 நிமிடம் பயணம் செய்ய 5 நபர்களுக்கு ரூ.1,200 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் முதல்முறையாக உதகை படகு இல்லத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "டோனட் போட்" எனப்படும் மின்சார படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்சார படகு சவாரி சுற்றுலா பயணிகள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

சத்தமே இல்லாமல், சுடச்சுட டீயுடன், ஊட்டி வர்க்கி, கட்லெட், சமோசா என உணவுகளை சாப்பிட்டவாறு படகில் பயணிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.

20 நிமிடம் பயணம் செய்ய 5 நபர்களுக்கு ரூ.1,200 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

Tags:    

Similar News