தமிழ்நாடு (Tamil Nadu)
null

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி எஸ்.மணிக்குமார் நியமனம்

Published On 2024-06-20 12:52 GMT   |   Update On 2024-06-20 14:02 GMT
  • 2006 ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக எஸ்.மணிக்குமார் பணியாற்றினார்.
  • 2019 ஆண்டு அக்டோபர் மாதம் கேரளா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக கேரளா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமாரை கவர்னர் ஆர்.என்.ரவி நியமனம் செய்துள்ளார்.

கேரளா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அல்லது 70 வயதை எட்டும் வரை இந்த பொறுப்பில் நீடிப்பார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006 ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக எஸ்.மணிக்குமார் பணியாற்றினார். 2019 ஆண்டு அக்டோபர் மாதம் கேரளா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2023 ஏப்ரல் 23 அன்று அவர் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News