தமிழ்நாடு (Tamil Nadu)

அரசு தாவரவியல் பூங்காவில் தேநீர் கோப்பை வடிவில் மலர் தொட்டிகள்- சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்

Published On 2023-12-30 05:20 GMT   |   Update On 2023-12-30 05:20 GMT
  • சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு வகையான மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.
  • இருக்கைகள் காய்கறி-பழங்களின் வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி:

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அப்போது பெரும்பாலானோர் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வந்து அதனை சுற்றிப்பார்ப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

எனவே ஊட்டி தாரவவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு வகையான மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.

இங்கு மலர்கள் தற்போது பூத்து குலுங்கி வருகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

இதுதவிர ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான தொட்டிகளில் பல்வேறு வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டு அவை தற்போது கண்ணாடி மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ளன.

மேலும் அங்கு சுற்றுலா பயணிகளை கவரும்வகையில், ஜப்பான் பூங்காவில் அழகிய மாடம் மற்றும் மீன் தொட்டி ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுக்கும் வகையில் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் வண்ணமிகு இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த இருக்கைகள் காய்கறி-பழங்களின் வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது.

மேலும் தாவரவியல் பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும் பழைய டயர்கள் மூலம் தேநீர் கோப்பை உட்பட பல்வேறு வடிவங்களில் மலர் தொட்டிகள் வைக்கப்பட்டு, அதில் விதம்-விதமாக மலர்ச்செடிகள் வைக்கப்பட்டு உள்ளன. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

Tags:    

Similar News