தமிழ்நாடு

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ- மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசம்

Published On 2023-03-06 03:10 GMT   |   Update On 2023-03-06 03:10 GMT
  • கொடைக்கானல் வனப்பகுதியில், கடும் வெப்பம் நிலவி வருகிறது.
  • கோடை காலத்தில் வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படும்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் வனப்பகுதியில், கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் அரசு, தனியார் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனை வனத்துறையினர் அணைத்து வருகின்றனர்.

இந்தநிலையில் கருவேலம்பட்டி, கோம்பைப்பட்டி ஆகிய இடங்களில் மீண்டும் தீப்பிடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. காட்டுத்தீயில் அந்த பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள், மூலிகை செடி எரிந்து நாசமாகின. மேலும் வனவிலங்குகள் வெளியேறி வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் மலைக்கிராம மக்கள் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த காட்டு தீயானது, கொடைக்கானல்-பழனி பிரதான மலைப்பாதைக்கும் பரவி எரிந்து வருகிறது.

வழக்கமாக, கோடை காலத்தில் வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படும். இந்த ஆண்டு அவை அமைக்கப்படாததால்தான் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது என்றும், தீயை கட்டுப்படுத்துவதற்கு நவீன உபகரணங்கள் வாங்குவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News