தமிழ்நாடு (Tamil Nadu)
கள்ளச்சாராய பலி- கள்ளக்குறிச்சி விரைகிறார் பிரேமலதா
- தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கள்ளக்குறிச்சி செல்ல உள்ளார்.
- உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 127 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் பலியான நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கள்ளக்குறிச்சி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும், மருத்துவமனையில் இருப்பவர்களை சந்திக்கவும் பிரேமலதா கள்ளக்குறிச்சி செல்கிறார்.
கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 127 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ச்சியாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரிசையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் என அரசியல் தலைவர்கள் கள்ளக்குறிச்சி செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.