தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம்- தமிழக அரசு

Published On 2024-08-17 08:15 GMT   |   Update On 2024-08-17 08:15 GMT
  • மகளிர் உரிமைத்தொகை குறித்து வதந்தியால் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
  • பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தனர்.

திருப்பூர்:

தமிழக அரசு பொறுப்பேற்ற பின்பு மகளிருக்கு உரிமை தொகை ஆயிரம் வழங்கும் திட்டம் 2023ம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து நவம்பர் மாதம் 2-ம் கட்டமாக விடுபட்ட பெண்களுக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான பெண்களுக்கு வழங்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த ஒரு வார காலமாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இன்று , திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு உரிமைத்தொகைக்காக விடுபட்ட பெண்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படுவதாகவும், பெறப்படும் விண்ணப்பங்கள் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என போஸ்டர் ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலானது.

இதனை உண்மையென நம்பிய திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட காங்கேயம், பெருமாநல்லூர், கே.வி.ஆர். நகர், அவிநாசி, முதலிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தனர். அது போன்ற முகாம்கள் எதுவும் இன்று நடைபெறவில்லை என கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறினாலும் கூட பெண்கள் தொடர்ந்து காத்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு வேண்டுகோண் விடுத்துள்ளது அதில்,

மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என போஸ்டர் ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளது.

இதனையடுத்து மகளிர் உரிமைத்தொகை வதந்திகளை நம்பம் வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News