தமிழ்நாடு

அமைச்சர் துரைமுருகன்

பள்ளி விழாவில் திடீர் மின்தடை- பாதியில் கிளம்பிய அமைச்சர் துரைமுருகன்

Published On 2022-09-13 03:08 GMT   |   Update On 2022-09-13 03:08 GMT
  • நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.
  • திடீரென மின்சாரம் தடைபட்டதால் அதிகாரிகளும், எம்.எல்.ஏ.க்களும் மின்துறைக்கு போன் போட்டனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. உடனே அதிகாரிகளும், எம்.எல்.ஏ.க்களும் மின்துறைக்கு போன் போட்டனர். இருந்தும் 10 நிமிடம் வரை மின்சாரம் வரவில்லை. இதனால் விழாவை பாதியில் முடித்துக்கொண்டு அமைச்சர் துரைமுருகன் புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News