தமிழ்நாடு (Tamil Nadu)

தலைமை தேர்தல் ஆணையத்தை வலியுறுத்த அ.தி.மு.க. மீண்டும் தீவிரம்

Published On 2023-02-24 11:15 GMT   |   Update On 2023-02-24 11:16 GMT
  • தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றும்படி வற்புறுத்த முடிவு செய்துள்ளார்கள்.
  • சிவில் வழக்கு முடிவு வரும் வரை எடப்பாடி பழனிசாமி தரப்பின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க கூடாது.

சென்னை:

கடந்த ஜூலை 11-ந்தேதி நடத்தப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பாக தீர்ப்பு அளித்தது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உற்சாகம் அடைந்துள்ளார்கள். அடுத்ததாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திலும் முறையிட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வில்லை என்றும் ஒருங்கிணைப்பாளர் என்றே நீடிப்பதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துவிட்டதால் பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்தது ஆகியவை உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கருதப்படுகிறது.

இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றும்படி வற்புறுத்த முடிவு செய்துள்ளார்கள். இதற்காக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நகலுடன் கோரிக்கை மனுவையும் இணைத்து தேர்தல் ஆணைய அதிகாரியை நேரில் சந்தித்து வழங்க முடிவு செய்துள்ளார்கள்.

சி.வி.சண்முகம் எம்.பி. அடுத்த வாரம் திங்கட்கிழமை டெல்லியில் நேரில் வழங்குவார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் சிவில் வழக்கு முடிவு வரும் வரை எடப்பாடி பழனிசாமி தரப்பின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க கூடாது. தற்போது கடைபிடிக்கப்படும் நிலையே தொடர வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளது.

Tags:    

Similar News