தமிழ்நாடு (Tamil Nadu)

உழவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நற்செய்தி... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட பதிவு

Published On 2024-06-13 09:29 GMT   |   Update On 2024-06-13 09:30 GMT
  • அனுமதியை வட்டாட்சியர்களிடமிருந்து இணைய வழியாகக் கட்டணமின்றிப் பெற்றுக் கொள்ளலாம்.
  • மழைநீரைச் சேமிக்கவும் மக்கள் பயன்பெறவும் இத்திட்டம் துணைபுரியும்!

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் 'உழவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நற்செய்தி' என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டு பதிவிட்டுள்ளதாவது:-

உழவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நற்செய்தி..

நீர்நிலைகளைத் தூர்வாரி எடுக்கப்படும் மண்ணை, வேளாண் பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் நீங்கள் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்தவொரு நீர்நிலையில் இருந்தும் எடுத்துக்கொள்ளலாம்!

இதற்கான அனுமதியை வட்டாட்சியர்களிடமிருந்து இணைய வழியாகக் கட்டணமின்றிப் பெற்றுக் கொள்ளலாம்.

மழைநீரைச் சேமிக்கவும் மக்கள் பயன்பெறவும் இத்திட்டம் துணைபுரியும்!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Tags:    

Similar News