தமிழ்நாடு

காரில் சிலிண்டர் வெடித்த விவகாரம்: அனைத்து கோணங்களிலும் விசாரணை- டிஜிபி சைலேந்திர பாபு தகவல்

Published On 2022-10-23 07:28 GMT   |   Update On 2022-10-23 07:28 GMT
  • இறந்த நபர் யார் ? எதற்காக வந்தார் எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
  • புலன் விசாரணையில் ஏதேனும் கண்டறியப்பட்டதால் என்.ஐ.ஏ விசாரணைக்கு செல்லுமா என்பது குறித்து தெரியும்.

கோவையில் கோவில் அருகே கார் வெடித்து ஒருவர் பலியான இடத்தை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உக்கடத்தில் காரில் இருந்த 2 கேஸ் சிலிண்டர்கள் இருந்துள்ளது. இதில் ஒரு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த நபர் யார் ? யாருடைய கார் என்பது குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

காரில் இருந்த சிலிண்டர்கள் எங்கிருந்து வாங்கப்பட்டன. இறந்த நபர் யார் ? எதற்காக வந்தார் எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

புலன் விசாரணையில் ஏதேனும் கண்டறியப்பட்டதால் என்.ஐ.ஏ விசாரணைக்கு செல்லுமா என்பது குறித்து தெரியும்.

6 குழுக்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News