தமிழ்நாடு (Tamil Nadu)

அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை

Published On 2023-01-24 05:07 GMT   |   Update On 2023-01-24 05:07 GMT
  • அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது.
  • எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் தொகுதியில் தேர்தல் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று விவாதித்து முடிவு செய்கிறார்கள்.

சென்னை:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்.

இதற்காக கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு கோரி உள்ளார்கள். பா.ஜனதாவை தவிர மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துவிட்டன.

எனவே பா.ஜனதாவும் தனித்து போட்டியிடுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய பலம் வாய்ந்த கட்சி அ.தி.மு.க.தான் என்று அண்ணாமலை வெளிப்படையாகவே தெரிவித்து உள்ளார்.

எனவே அ.தி.மு.க.வுக்குத் தான் பா.ஜனதாவின் ஆதரவு என்பது உறுதியாகி விட்டது. இதற்கான அறிவிப்பு டெல்லி மேலிடத்தில் இருந்து இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க.வினரும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார்கள்.

இன்று மாலையில் அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கூட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் தொகுதியில் தேர்தல் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று விவாதித்து முடிவு செய்கிறார்கள்.

Tags:    

Similar News