தமிழ்நாடு

கள்ளச்சாராய விவகாரம்... கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை- எடப்பாடி பழனிசாமி

Published On 2024-06-22 04:30 GMT   |   Update On 2024-06-22 04:30 GMT
  • தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டதே 53 பேர் பலியாக காரணம்.
  • தி.மு.க. அரசின் போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவராது.

சென்னை :

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டசபையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,

* கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவே அவையில் பேச அனுமதி கேட்டோம், ஆனால் தரப்படவில்லை.

* மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இது மக்களின் உயிர் பிரச்சனை என்பதால் அவையில் விவாதிக்க அனுமதி கேட்டோம்.

* கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 183 பேரில் 55 பேர் உயிரிழந்ததாக செய்திகள் கூறுகிறது.

* விஷ முறிவு மருந்து இருப்பு இல்லை என நான் கேட்டதற்கு வயிற்று புண்ணுக்கான மருந்து ஸ்டாக் இருப்பதாக அமைச்சர் கூறுகிறார். நான் சொன்ன மருந்து வேறு.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன மருந்து வேறு..

* தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டதே 53 பேர் பலியாக காரணம்.

* கள்ளச்சாராயம் குடித்தவர்கள் காலதாமதமாக மருத்துவமனை வந்ததே பலர் பலியாக காரணம் என கூறப்படுகிறது. இதற்கு அரசு தான் காரணம்.

* கள்ளச்சாராயத்தால் உயிர்கள் பலியான நிலையில், கள்ளக்குறிச்சி ஆட்சியரோ அரசுக்கு ஆதரவாக பொய் கூறியுள்ளார்.

* வலிப்பு வந்ததால் ஒருவர் பலி, வயது முதிர்வின் காரணமாக மற்றொருவர் பலி என ஆட்சியர் கூறிய பொய்யால் பலர் பலி.

* தி.மு.க. அரசின் போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவராது. கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News