உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டதா? எடப்பாடி பழனிசாமி
- கள்ளச்சாராய சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரித்தால் மட்டுமே நியாயமாக விசாரணை நடைபெறும்.
- ஆளுங்கட்சியினர் ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற வாய்ப்பு இல்லை.
சென்னை:
கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் இன்று கவர்னரை சந்தித்து கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக மனு அளித்தனர்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,
* காவல் நிலையம் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
* அரசு அலுவலகங்கள் நிறைந்த மையப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது.
* கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு மருத்துவமனையில் முதலில் சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது.
* கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.
* கள்ளச்சாராய சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரித்தால் மட்டுமே நியாயமாக விசாரணை நடைபெறும்.
* ஆளுங்கட்சியினர் ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற வாய்ப்பு இல்லை.
* மரக்காணம் கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடி விசாரித்தது. அது பலனளிக்கவில்லை.
* தற்போது நடைபெறும் கள்ளச்சாராய ரெய்டுகளை முன்கூட்டியே செய்திருக்கலாம்.
* வனத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும். வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் காய்ச்ச வாய்ப்பு இல்லை.
* ஒரு நபர் விசாரணை ஆணையம் மூலம் நியாயம் கிடைப்பது சந்தேகம்தான்.
* உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டதா?
* போதைப்பொருட்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
* மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது.
* எனக்கு எதிரான வழக்கில், ஆர்.எஸ். பாரதி சி.பி.ஐ. விசாரணை கோரவில்லை. சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தான் உசச்சநீதிமன்றம் சென்றேன்.
* அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்ததற்கு என்ன ஆதாரம் உள்ளது?
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.